Thursday, June 29, 2006

சாலைப்பூ


தோழி...

உன் பிறந்த நாள் வாழ்த்து அட்டைக்கான
வார்த்தைகள் தேடிச் சலித்ததில்
துடங்கிற்று இக்கவிதை

நினைவு ஜன்னல்களின்
கட்டமிட்ட சல்லடைகளில்
சலித்ததால் வந்திருக்கும்
இவ்வளவு வார்த்தைகள்

ஒன்றாக உரக்க சிரிக்கும் போதும் கூட
ஒட்டிக்கொண்டிருக்கும் வேற்றுமைகள்,
அருகருகே இருந்தும்
அமைதியாய் இருந்த தருணங்களில்தான்
அரும்புகின்றன நட்புக்கான முதல் விதை

என்னுடன் நீ பேசியதை விட
எனக்காக நீ பேசிய தருணங்கள்
மகத்தானவை

நாம் தன்டவாளத்தின் ஒரு துன்டு
ஒலிக்கயில்...-கை கோர்த்து
பள்ளிக்கு ஓடியதில்லை !

ஒற்றை சைக்கிளில்
ஊர் சுற்றியதில்லை

பல்லங்குழியின் காசிக்கட்டங்களில்
உள்ளங்கையின் சூட்டை
உணர்ந்ததில்லை

இருந்தாலும்...

பறிக்கப்படாத சாலைப்பூக்களின்
அமைதியைப்போலவும்
நல்லிரவு கடந்து விட்ட
தெருவிளக்கின் கருணை போலவும்

நமக்கான நம் நட்பு
நாளும் பூத்திருக்கும்......

காதலால் ஆதலால்...(1)


1.
காதலால் ஏவாள்
கடித்ததால் தான்
ஆப்பிள் இன்னும் இனிக்கிறதோ !


2.

நீ கசக்கினாலும் இருக்கட்டும்நான்
உன் கைக்குட்டயாகவாவது இருக்கிறேன்


3.இந்த வலி
எனக்கு பிடிதிருக்கிறது
காரணம்இது நீ தந்தது !


4.
நான் உன் சிகரட் -
என்னை
உதடு சுடும் வரை குடி

நான் உன் நகம் - என்னை
காயமாக்கும் வரை கடி

நான் உன் நினைவு - என்னை
மறக்கும் வரை நினை

நான் உன் இதழ்கள்
உலர உலர என்னை ஈரப்படுது

நான் உன் கைக்குட்டை என்னை
நனையும் வரைத் துடை

நான் உன் கேசம்
நேசத்தோடு என்னை கோது

நான் உன் மனசாட்சி
என்னைக் காதலிப்பதாகச் சொல் !!