Wednesday, June 28, 2006

என் ஜன்னல் வழியே : புதுப்பேட்டை

என் ஜன்னல் வழிப் பார்வை:
புதுப்பேட்டை
" கழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உன்டோ !"



செல்வராகவன் ,அரவிந்த் கிருஷ்ணா,யுவன் சங்கர் ராஜாவின் இன்னுமொரு கூட்டு முயற்சி.
ஒரு கலவரப் படம் ,குடும்பத்துடன் பார்க்க முடியாது என்று சொல்லப்படுகிறப் படம்,ஆனால் குடும்பத்தினர் எல்லொருமே தனிதனியே பார்துவிடுகிற படமாக செல்வராகவன் படங்கள் அமைந்து விடுகின்றன.பதிரிக்கைகளின் ஞாயமான விமர்சணங்கள் இல்லாமையும் ,தவறுதல்லன பின்னூட்டங்களும் னல்ல படங்கள் மக்களை சென்று அடைவதற்கு தடையாக உள்ளது.நமக்கு அதெல்லாம் வேண்டாம்.நாம வந்த வேலையய் பார்ப்போம்.

பின்னனி இசை போதை தருவதாக இருக்கிறது."உனக்கு அம்மான்னா ரொம்ப பிடிக்குமா ?" "ஏங்...யாருக்கு புடிக்காது.நாயீ பூணைக்கெல்லந்தான் அம்மான்னா புடிக்கும்..." என்பதைத் தொடர்ந்து வரும் காட்சிகள் தனுஷ் வேளுத்து வாங்குகிறார்.16 வயதினிலே காலகட்டங்களில் கமலின் PERFOMANCE -சை பார்ப்பது போலவே இருந்தது.

பாங்..பேங்...பாங்..பேங்... என்று சவுன்டு விடாமல்,மெல்லிய இசையிலெயே திகிலை நிலைநிறுத்தியிருப்பது புதுமை.ரீ-ரெக்கார்டிங்கில் உள்ள அர்த்தமுள்ள மௌனங்கள்,யுவனை தன் அடுத்த நிலைக்கு அழைத்து சென்றிருக்கிறது.

திரைக்கதை பற்றியெல்லாம் பேசும் அளவுக்கு அதிகப்படியாக செல்ல மாட்டேன்!..கவலைப்ப் படாதீர்கள்."ஒரு தாதா கூட்டத்தில் எதர்ச்சியாக நுழயும் தனுஷ் பல வாழ்க்கைப் போராட்டன்களில் சிக்குகிறார்."

கூடி உண்ட போதும், அவரவர் உயிர்களுக்கு அவரவர் தான் பொறுப்பு என்ற சூத்திரத்தை அறிந்து கொள்கிறார்."ஆபத்தில் கோழைகூட வீரனாகிறான்" என்பதைப்போல உயிர் மீது உன்டான பயம் வீரம் என்று கறுதப்படுகிறது.அதை வெளிப்படுத்துவதாக ,
ஒருவனது கையை வெட்டப் போன இடத்தில் ,
"என்ன குமாரு பயமா இருக்கா "
"இல்ல (என்பது போல தலை ஆட்டுகிறர்)"
"சும்மா சொல்லாத.பயமா தானே இருஉக்கு"
"ஆம (என்பது போல தலை ஆட்டுகிறர்)"
"ஏனக்கும் பயமாதான் இருக்கு.
இருக்கட்டும்.பயந்தான் உன்ன காப்பாத்தும்.
நம்ம உயிர் மேல பயம் இருந்த்தத்தான் அடுத்தவன் உயிர எடுக்க முடியும்"...என்ற வசனம் பெரும் ததுவத்தை உள்ளடக்கியுள்ளது

மீண்டும் அதே சினிமா சிவப்பு-விளக்கு. சிவப்பு-விளக்கு பகுதி என்றால் இப்படித்தான் இருக்குமென்று சினிமா பார்வையாளர்களிடம் ஒரு PREJUDICE க்ரியேட்டாகிவிட்டது.எதார்த்தமான சில்மிஷங்கள்...செல். படத்தில் சொல்லத் தேவயில்லை.ஓரு கால கட்டத்தில்...பெரியவுரு... என்று சொல்லப்படும் கூட்டத்தலைவனை போட்டுத்தள்ளுகிறார் குமார். 'நேத்து மோளச்சவன்','ஒரு கொலை பன்னுனவன்..' என்று கேலி செய்யப்படும் குமார் ஒரு மாபெறும் வீரன்.நெருப்பு சிறியதாய் இருந்த்தால் என்ன ? அது வெளிச்சம் தானே .வெளிச்சம் வந்த்தால் இருள் பொய்விடவேன்டியதுதான் !.இல்லாமல் இருள் "இல்லை..இல்லை அதெப்படி ..நான் இவ்வாளவு நாளாக இருக்கிறேன்.நேற்று வந்த சிறு தீக்குச்சி என்னை விறட்டுவதா ?" என்றெல்லாம் சொல்ல முடியாது."கழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உன்டோ ?" என்கிறார் பாரதி .

தெருவோர சிறுவனாக;கருணையில்லா பொறுக்கியாக;மனிதாபமுள்ள காதலனாக மற்றும் பாசத்தால் பீடிக்கப்பட்ட அப்பாவாக வெவ்வேறு பரிணாமங்களில் தன் முத்திரையை பதித்திருக்கிறார் தனுஷ்.

செல்வியைய் கட்டாய மணம் புரிந்து கொள்கிறபோதும்,"இப்ப எங்கூட படுக்காலைனா உன் அண்ணனை கொன்றலான்னு தொனுது " எனப் பேசும் போது வக்கிறப்பட்டு நிற்க்கும் குமார் "ஊசுரோட இருக்கனுன்டா கண்ணு.அது தான் முக்கியம் ! ம்ஹூம்ம்...உன்ன எப்படியெல்லாம் வளக்கனும்னு ஆசப்பட்டேன்" என்று பேசும் போது இதயத்திற்க்கு மிக நெறுக்கமான ஒருவரைப் போல் தெறிகிறார்.

ஒரு படத்தில் காமடி என்பது முக்கியம்.தனுஷே ஒரு பெரிய காமடி.பல இடங்களில் 'இதை சீரியசாக எடுத்துக்கொள்வதா...இல்லை காமடியாக எடுத்துக்கொள்வதா என்று பெறுங்குழப்பம்.அந்த முடிவை பார்வையாளர்களிடமே விட்டுவிட்டது இயக்குனரின் சமயோஜிதம்.நகைச்சுவை கதையோடு கதையாக கலந்திருக்க வேண்டும்.அதுவும் அது ஹீரோ மூலமாகவே வெளிப்பட்டால் கதை,கதாநாயகன் ரென்டுபேருக்கும் ப்ளஸ்,இதற்கு சிறந்த உதாரணம் பாக்கியராஜ் படங்கள்.அப்படிப்பட்ட எக்ஸ்பெர்டைஸ் புதுப்பேட்டயில் தெரிகிறது.

கொல்ல வந்த எதிரியின் விருப்பத்திற்க்கு பனிந்து செல்லும் விசித்திர கதாபாத்திரமாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது கொக்கி குமார் என்னும் படைப்பு.கொலையாளிக்கும் கொலை செய்யாப்பட்டவனுக்கும் இறுதியில் ஏற்படும் ஒரு விதப் பாச உணர்வு ,சாதரண பார்வயில் புரிந்து கொள்ள முடியாதவை.கொலையுண்ட மூர்த்தியின் பிணத்தை கட்டி அழும் காட்சி கொக்கி குமார் என்னும் கதாபாத்திரத்தின் உச்சம்.(இக் காட்சி பல திரையரங்குகளில் திரையிடப்படவில்லை).

இன்று ஹீரோ வில்லன் என்ற இரு ஜீவராசிகளுக்கு நடுவே கதை நிகழ்வது இல்லை.பாத்திரங்கள் அரங்கேற்றப் படுகின்றண .ஹீரோ வில்லன் தேர்வெல்லாம் பார்வையாளர்களே செய்துகொள்கிறார்கள்.


கதை என்பது முடிந்த விஷயம் அல்ல ...அது ஒரு நிகழ்வு..நிகழ்ந்து கொண்டே இருப்பது...

கொக்கி குமார் நல்லவனா கெட்டவன்னா தெரியாது
புதுப்பேட்டை என்பது பொய்யா உண்மையா என்று தெரியாது...

ஏனென்றால் "ஒன்று உண்மையா பொய்யா என்பதை தீர்மாணிப்பது காலம் தானே ? "

*** முற்றும்***

2 comments:

Virhush said...

Miga chirandha thelivana vimarsanam. nalla varthai velipadugal, keep it up ya

வெங்கட்ராமன் said...

சிறந்த விமர்சனம்,
நான் ரசித்தவற்றை அழகாக சொல்லி இருக்கிறீற்கள்,