Tuesday, August 22, 2006

கடைசி கடிதம்



நிராகரிப்பின் சோகம் நிலைகொள்ளாமல் போகும்போது வார்த்தைகள் வலுவற்றதாகிவிடுகிறது...இறுதி எப்பொதும் வசீகரம் நிறைந்ததாகவே இருக்கிறது.கடைசி முத்தம், கடைசி பார்வை, கடைசி கை அசைப்பு, கடைசி பயணம் என்று.பிரியம் கூடிவிட்டிருந்த நண்பர்களின் பிரிவு துக்கங்களை கக்கிய வண்ணமிருக்கின்றன.

அப்படியான அரிய வெளிப்பாடுகளில் ஒன்று இது...



பாசமிகு தோழி...


தெரியவில்லை...இதை ஏன் எழுதுகிறேன் என்றே.இரண்டு வாய்ப்பு உண்டு .இதைப்ப் படித்து முடித்து கொச்சையாக உமிழ்ந்து கிழித்து எறிந்து விடலாம்.அல்லது சப்தங்கள் அடங்கிவிட்ட ஒரு இரவின் ச்ங்கீதமாய் கேட்டு நகர்ந்து போய் விடலாம்.

மௌனத்தின் பிரம்மாண்டமான மதில் சுவர்களை கடக்க முடியாமல் அதன் சுவற்றிலே ஊறும் ஒரு பூரானைப் போல பேசவேண்டியவை மூலையில் முடங்கி இருக்கின்றன.ஆனால் வார்த்திகள் வடிகாட்டி விடுகிற மென் பாடலை பரஸ்பர மௌனங்கள் வெளிப்படுத்திவிடுகின்றன.

பகிர்ந்து கொள்ளுதல் வார்த்தைகள் வழியாக சாத்தியப்ப் படும்போது உறவுகள் ஆசுவாசப்படுகின்றன.வார்த்தைகள் நாம் உமிழும் வரை தான் நமக்கு சொந்தமாகின்றன - அதன் பின் பிரபஞ்ச னீள் கடலின் மனற்பரப்பில் புதைந்து விடுகின்றன.கடலோரத்தில் கிளிஞ்சல்களை பொறுக்கிய வண்ணம் ஒரு சிருவன் செல்வதைப் பார்க்கின்றேன் .ஒரு கையளவு கிளிஞ்சல்கள் செர்ந்தவுடனே அதை கொட்டிவிட்டு மீண்டும் தன் முடிவற்ற தெடலில் புதைந்தவனாக அவன் இருந்தான்.

இரவின் கண்ணீர் மிகவும் கனத்ததாக இருக்கின்றது.நிராகரிப்பின் ஒலி எங்கோ நீண்டு ஒலிக்கின்றது.புறக்கணிப்பின் சோகம் படிந்த மனற்மேடுகளில் பரல்களை உருட்டும் சப்தம் கேட்டவண்ணமே இருக்கிறது. யார்யாரோ இரவுகளில் உறக்கமற்று அலைகிறார்கள்.

ஆனால் பிடித்திருக்கிறது இது.காயங்கள் அற்ற நாட்கள் யார் நினைவிலும் நிலைப்பதில்லை .
ரணங்களற்ற முகங்களை யவரும் ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை.
எதையுமே நினைவுபடுத்தாத முகங்கள் எளிதில் மறக்கப்பட்டுவிடும்.

அந்த அளவில் யவருடைய உரையாடல்கள் மூலமோ,சில கவிதைகள் மூலமோ,உன் பெயர் கொண்ட
சிறுமிகள் மூலமோ என் நெஃப்ரான்களின் பயண்பாட்டு பங்கீடுகளில் நீயும் கலந்து கொள்வாய்.

இவை அனைத்தும் புரிந்து கொள்வதற்காக எழுதியதாக எனக்கு தெரியவில்லை.எனது
வார்த்தைகள் அந்தி கழிந்து மதிலேறி நிறயும் இருட்டு.இருள் ஒரு வகையில் அசௌகரியம்.
ரசிக்கப் பழகியவர்களுக்கு, அழகு.உங்கள் மெழுகுபத்திகளை அனைத்து விடுங்கள்.ஏனெனில்,
ஒரு சிறு தீக்குச்சியின் ஒளி கூட நிலவின் ரம்யத்தை ரசிக்க விடாமல் தடுத்துவிடலாம்...

தெரிகிறது... நீ என்ன சொல்கிறாய் என்று...என்ன செய்வது...


******** ஆழ்ந்த புரிதல்களில் *******
எழுந்த கவிதை

எதிர்கொள்ளும் போது
எதுவும் புரிவதில்லை

******** ~ மனுஷ்ய புத்திரன் ***********

***முற்றும்***








No comments: