Thursday, August 24, 2006

காதலால் ஆதலால்...(3)

மழை...மின்னல்...அவள்
---------------------------------


அன்று கும்ம் இருட்டு...
இருட்டென்றால் எப்படி சொல்வது..?
அவள் கூந்தல் போல இருட்டென்று சொல்லலாம்
இல்லை..இல்லை..அவள் கருவிழி இருட்டு

அப்படி யொரு மழை
மழை யென்றால்..அது அது
அவளது பேச்சைப் போல மழை

அய்யோ அந்த மின்னல்
மின்னலென்றால்...மின்னல்
அவள் பார்வை போன்ற மின்னல்

உலகைப் பிறட்டும் இடி
இடியென்றால் ...அப்பப்பா..
அவள் கோபம் போல

எவ்வளவு நேரம்...
கொஞ்ஜம் கூட குறையவே இல்லை...
அவள் சிற்றூடல் போல

எப்படியோ சமாதானம் ஆயிற்று
என்ன ஒரு அமைதி...
அவளது மோகம் போல

எப்படியோ விடிந்தது
கதிரவன் கைகாட்டியது ஆத்தே!
என்ன பிரகாசம்...அவள் புன்னகை போல..

~ 2003


காதலால் ஆதலால்...(2)


பந்தம்
--------------

எங்கள் பந்தம்...
வார்த்தைகளில் சிக்காத சொந்தம்
காமம் கடந்ததொரு காதல்..
காதலும் கடந்ததொரு நட்பு ..
நட்பும் கலந்ததொரு உறவு..
உறவும் கடந்ததொரு உரிமை..
உரிமையும் கடந்ததொரு ..
உணர்வு உணர்வும் கடந்ததொரு உண்ணதம் ..

உதட்டளவில் சொன்னால் "உண்மை"..
உண்மையில் சொன்னால் 'உயிர்' ..!

~ 2003